ZTAMIL தமிழ் செய்திகள்

தேசியகீதம் தேசப்பற்றை வளர்க்க புது முயற்சி தியேட்டர்களில் (New effort to develop)

Written By Latest News on Sunday, 26 June 2011 | 19:07


சேலம்: சேலத்தில், பெரும்பாலான தியேட்டர்களில், திரைப்படம் ஆரம்பிக்கும் முன், தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது. தியேட்டருக்கு வரும் மக்கள், எழுந்து நின்று நாட்டுப்பற்றை வெளிப்படுத்துகின்றனர். இந்த புதிய முயற்சி, அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது.சுதந்திர தினம், குடியரசு தினம் மட்டுமின்றி அரசு விழாக்களில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது.தற்போது, தியேட்டர்களில் ஒ(ளி)லிபரப்பாகும் தேசிய கீதம், அனைத்து தரப்பினரிடத்திலும் சென்றடைந்துள்ளது. சேலம், கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில், நவீனமயமான தியேட்டர்களில், காலைக்காட்சி ஆரம்பிக்கும் முன் தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது. ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்ற வாசகமும் ஒளிபரப்பாகிறது.தொடர்ந்து, ஜன கன மன பாடல் ஒலிக்க, அனைத்து தரப்பு மக்களும் எழுந்து நின்று இந்திய தாய்க்கு மரியாதை செலுத்தும் காட்சி, படம் பார்க்க வந்தோரை மெய்சிலிர்க்க வைக்கிறது. நாட்டுப்பற்றை வளர்க்கும் இந்த முயற்சி, அனைத்து தரப்பிலும் இருக்க வேண்டும்.சேலத்தில் தியேட்டர் நிர்வாகிகளிடம் கேட்டபோது, "தியேட்டர்களில் தேசிய கீதம் ஒளிபரப்ப வேண்டும் என்ற சட்டம் உள்ளது. தியேட்டர்களில், காலைக்காட்சி ஆரம்பிக்கும் முன் ஒளிபரப்புவோம். பொதுமக்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்' என்றனர்.

No comments:

Post a Comment