ZTAMIL தமிழ் செய்திகள்

ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்

Written By Latest News on Sunday, 26 June 2011 | 19:14

ஐஸ்வர்யா ராய்க்கு நிச்சயமாக இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று பிரபல ஜோதிடர் பவித் ஷாங்காய் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நாயகியுமான ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ‌ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆன பின்னரும், குழந்தை வேண்டாம் என்று நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக, அவரது மாமனாரும், பாலிவுட் நடிகருமான அமிதாப் பச்சன் சில தினங்களுக்கு முன்னர் கூறினார். ஐஸ்வர்யா ராய், அம்மாவாக போவதை அறிந்து பாலிவுட் முதல் ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஜோதிடர் பவித் ஷாங்காய் ஐஸ்வர்யாவுக்கு, இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று கணித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஐஸ்வர்யா ராய், 2011ம் ஆண்டு கர்ப்பம் அடைவார் என்று முன்கூட்டியே கணித்து இருந்தேன். அது இப்போது நிஜமாகிவிட்டது. அதேபோல் அவருக்கு நிச்சயம் பெண் குழந்தை அல்லது இரட்டை குழந்தை தான் பிறக்கும். ஏனென்றால், அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யாவின் ராசி எண் 5, ஆகையால் அவருக்கு கண்டிப்பாக இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று அடித்து கூறுகிறார்.

No comments:

Post a Comment