ZTAMIL தமிழ் செய்திகள்

அருள்நிதியின் உதயன் திரை விமர்சனம்

Written By Latest News on Saturday, 25 June 2011 | 09:02


மதுரையில் பெரிய தாதாவாக விளங்கும் ஆசிஸ் வித்யார்த்தின் வீட்டில் ஒரு கொலை நடந்து விடுகிறது அந்த கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க ஆசிஸ் வித்யார்த்தின்
கும்பலை சேர்ந்தவர்கள் ஊர் ஊராக தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள்.
ஆசிஸ் வித்யார்த்தின் கும்பலானது ஒவ்வொரு ஊரிலிருக்கும் முக்கிய ரவுடிகளிடமும், தன் வீட்டில் நடந்த கொலைக்கு யார் காரணம் என்று மிரட்டுகிறார்கள். அனைவரும் பயத்தில் தான் இல்லை என்று கூறிவிடுகிறார்கள். இறுதியாக ஆசிஸ் வித்யார்த்தி அப்பு என்ற ரவுடிதான் அதற்கு காரணம் என்று கண்டு பிடித்து சென்னையை வந்தடைகிறார்.
இந்த படத்தில், வசந்த் என்ற கதாபாபாத்திரமாக வருகிறார் அருள்நிதி. இவர் ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக ( Assitant Manager ) பணிபுரிகிறார். அறிமுக நாயகியாக பி்ரணிதா, பிரியா என்ற கதாபாத்திரத்தில் இணைய தள அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த இரண்டு பெயருக்கும் இடையேயான முதல் சந்திப்பு சிறு விபத்தில் நிகழ்கிறது. அதாவது, அருள்நிதி சென்று கொண்டிருக்கும் பைக் எதிர்பாரத விதமாக பி்ரணிதாவின் பைக்கின் மீது மோதுகிறது. அதிர்ச்சியில் திரும்பி பார்க்கும் பி்ரணிதாவின் முதல் பார்வையிலே, தன் மனதை பறிகொடுத்துவிடுகிறார்.
இச்சந்திப்பை தொடர்ந்து அருள்நிதி, பி்ரணிதாவின் வண்டியை தொடர்ந்து சென்று தான் உன்னை மணக்க விரும்புவதாக .கூறும்போது அதை நிராகரிக்கிறார் பி்ரணிதா. இருந்தாலும், தன் தொடர் முயற்சியில் காதலில் வெற்றி பெறுகிறார் அருள்நிதி.
இந்நிலையில் பி்ரணிதாவின் தந்தை, அப்பு என்ற ஒரு தாதாவிடம் ஆடிட்டராக பணியாற்றுகிறார். ஒரு சமயத்தில் இவர்களின் காதல் பி்ரணிதாவின் தந்தைக்கு தெரிய வருகிறது. அதனால் அப்புவிடம் தன் மகளின் காதலை சொல்லி "அந்த பையனை கொஞ்சம் கண்டித்து வைங்க" என்று சொல்ல ரவுடி அப்பு தன் தம்பியிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார் ,அண்ணன் சொல்லியதால் அருள் நிதியை மிரட்ட அப்புவின் தம்பி செல்கிறார்
எதிர்பாராத விதமாக அந்த கும்பலில் ஒருவன் இவன் தான் நம்ம அண்ணனை அடிச்சவன் என்று சொல்வதால் கோபப் படும் அப்புவின் தம்பி அருள் நிதியை கத்தியால் குத்தி விட அதே சமயம் அங்கு வரும் ஆசிஸ் வித்யார்த்தி அப்புவின் தம்பியை வெட்டி விடுகிறார் , அருள் நிதி ஆசிஸ் வித்யார்த்தியை அப்பா என்று சொல்லி மயக்கம்முற இடைவேளை வருகிறது .
அதற்கு பின் அருள் நிதியின் பிளாஷ் பேக் ஆரம்ப மாகிறது ,இரட்டை வேடத்தில் அருள் நிதி நடித்திருக்கிறார் ,ஊரில் அப்பாவை போலவே ரவுடி தனம் செய்யும் உதயனாக ஒரு வேடத்தில் அருள்நிதி ,தன் அண்ணன் மற்றும் அப்பாவின் செயல்களை வெறுக்கும் மற்றொரு வேடத்திலும் நடித்திருக்கிறார். ஒரு சந்திப்பில் அப்புவிடம் ஏற்படும் சண்டையில் அப்புவை அவமான படுத்துகிறார் உதயன் அதற்கு பழி வாங்க அப்பு உதயனை கொலை செய்து விடுகிறார் , அதனால் வெறுப்பு அடையும் அருள் நிதி யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு வந்து விடுகிறார் .அண்ணன் தம்பி இருவர் என்று தெரியாத அப்பு தன் தம்பியை கொலை செய்த அருள் நிதியை கொல்ல துடிக்கிறார்,வழக்கம் போல் சண்டைக்கு பின் அப்பு திருந்தி விடுகிறார் .
படத்தின் கதை மற்றும் திரைக்கதை எண்பதுகளில் வந்த ரஜினி ,கமல் படங்களை நினைவு படுத்துகிறது ,இயக்குனர் சாப்ளின் பழைய படங்களின் DVD களை பார்த்து விட்டு அங்கே பழைய நடிகர்களை எடுத்து விட்டு அருள் நிதியை நடிக்க வைத்திருக்கிறார் ,இடை வேளைக்கு பிறகு படம் எப்படா முடியும் என்று இருக்கிறது ,அவ்வளவு மொக்கையான திரைக்கதை ,எப்படித்தான் இந்த மாதிரி படங்களில் நடிக்க அருள் நிதிக்கு தைரியம் வந்ததோ ,இப்படியே இன்னும் ரெண்டு படங்களில் நடித்தால் அவரின் சினிமா வாழ்கை கேள்வி குறிதான். பாடல்களும் பெரிதாக எடுபடவில்லை ,இரைட்டை அர்த்தத்தில் பேசினால் காமடி என்று சந்தானத்திடம் யாரோ சொல்லி இருப்பார்கள் போல ,காமெடி இல்லை வெறும் காம நெடி தான்,
மேல் பட்டனை கழட்டி விட்ட எப்பேர் பட்ட ஆம்பளையும் கவுந்துடுவான் என்று ஷர்ட் மேல் பட்டனை கழட்டி விடும் கதாநாயகியின் தோழி ,மாமி பூனைக்கு வாலை வயுத்துல வரஞ்சு இருக்காங்க அது வாலு இல்ல பூ.. என்று சந்தானம் பச்சையாகவே பேசி இருக்கிறார் ,மொத்தத்தில் பழைய படத்தின் கதையாய் புது விதமாய் யோசிக்காமல் பழசாகவே எடுத்திருக்கிறார் இயக்குனர்.

No comments:

Post a Comment