ZTAMIL தமிழ் செய்திகள்

தொடர் செய்திகள்

Bajaj Auto launches Nano car for little Car more than,பஜாஜ் ஆட்டோ நானோவை விட குட்டிக் காரை அறிமுகப்படுத்தியது

Written By Latest News on Tuesday, 3 January 2012 | 07:19

பஜாஜ் ஆட்டோ நானோவை விட குட்டிக் காரை அறிமுகப்படுத்தியது


ஆர்இ-60 என்ற குறியீட்டு பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த குறைந்த விலை காரில் 4 பேர் பயணம் செய்யலாம்.

சோதனை நிலைகளில் லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் செல்வதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தினசரி பயன்பாட்டின்போது கூட லிட்டருக்கு 35 கிமீ வரை மைலேஜ் தரும் என்று கருதப்படுகிறது.

இந்த காரில் ட்வின் ஸ்பார்க் தொழில்நுட்பம் கொண்ட 200சிசி காரின் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய குட்டிக் காரில் 44 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கி மற்றும் இருக்கைகளுக்கு கீழ் 95 லிட்டர் ஸ்டோரேஜ் பகுதியும் இருக்கிறது.

தற்போது உலகின் குறைந்த விலை கார் என்ற பெருமையை பெற்றுள்ள டாடா நானோவை விட இந்த கார் குறைந்த விலை கொண்ட காராக விற்பனைக்கு வரும் என்று கருதப்படுகிறது.

ரினால்ட்-நிசான் கோரினால் இந்த புதிய குட்டிக் கார் தயாரித்து வழங்கப்படும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புதிய குட்டிக் கார் ஆட்டோ ரிக்ஷாவுக்கு மாற்றாக விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த புதிய கார் எல்பிஜி வெர்ஷனிலும் கிடைக்கும் என்று தெரிகிறது.

புதிய குட்டிக் கார் ரூ.1.25 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று கருதப்படுகிறது. இந்த புதிய குட்டிக் கார் மூலம் 4 சக்கர வாகன தயாரிப்பிலும் பஜாஜ் ஆட்டோ நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Bajaj Auto launches Nano car for little Car more than,பஜாஜ் ஆட்டோ நானோவை விட குட்டிக் காரை அறிமுகப்படுத்தியது
07:19 | 0 comments | Read More

SSLC exam will start from april 4 , புதிய செய்தி ஏப்ரல் 4, 10ம் வகுப்புத் தேர்வு தேர்வுத் துறை அறிவிப்பு

புதிய செய்தி ஏப்ரல் 4,  10ம் வகுப்புத் தேர்வு தேர்வுத் துறை அறிவிப்பு


ஏப்ரல் மாதம் 4ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்குகிறது என்று பள்ளிக்கல்வி தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தாமதமாக துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பாடங்கள் முழுமையாக நடத்தப்படாதது தான் அதற்கு காரணம். வழக்கமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மார்ச் மாத இறுதியில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்குகிறது

தேர்வு அட்டவணை விவரம் வருமாறு,

4-4-12 : தமிழ் முதல் தாள்
9-4-12: தமிழ் இரண்டாம் தாள்
11-4-12: ஆங்கிலம் முதல் தாள்
12-4-12: ஆங்கிலம் இரண்டாம் தாள்
16-4-12: கணிதம்
19-4-12: அறிவியல்
23-4-12: சமூக அறிவியல்

இந்த ஆண்டு சுமார் 11 லட்சம் மாணவ, மாணவியர் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SSLC exam will start from april 4 and end on 23rd of the same month in Tamil Nadu
06:58 | 0 comments | Read More